இறப்பதற்கான தனது உரிமையை நீதிமன்றத்தில் போராடி வென்ற சிறுமி


பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் இறப்பதற்கான தனது உரிமையை நீதிமன்றத்தில் போராடி வென்றெடுத்துள்ளார்.
இருதய துவாரம் காரணமாக பாதிக்கப் பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹன்னா ஜோன்ஸ் என்ற சிறுமியின் உயிரைக் காப்பாற்ற இருதய மாற்றுச் சிகிச்சை மேற்கொள்வதை விட வேறு வழியில்லை என மருத்துவர்கள் தெரிவித்து, அச்சிகிச்சைக்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கினர்.


ஆனால், ஹன்னா ஜோன்ஸோ அறுவைச் சிகிச்சைக்கு உட்பட மறுப்புத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமி இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என கடந்த பெப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது.

எனினும், சிறுமியின் கோரிக்கைக்கு ஆதரவளித்த சிறுமியின் பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் மேன்?றையீடு செய்தனர்.

உயர் நீதிமன்றமானது சிறுமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

சிறுமிக்கான இருதய மாற்று அறுவைச் சிகிச்சையானது தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவும் மீறி அச்சிகிச்சை வெற்றி பெற் றாலும் தொடர்ந்து மருத்துவ கவனிப்புக்கு சிறுமி உட்பட நேரிடும் எனவும் மருத்துவர் கள் தெரிவித்ததையடுத்தே, சிறுமி மேற்படி சிகிச்சைக்கு மறுப்புத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனைப் பராமரிப்பிலிருந்து விடுபட்டு வீடு திரும்பி, அங்கு தனது எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க ஹன்னா ஜோன்ஸ் விருப்பம் தெ?வித்துள்ளார்.

நீண்ட நாள் சிந்தித்து சுயமாகவே இந்த முடிவை எடுத்ததாக சிறுமி கூறியதாக அவ?டம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹன்னாவின் தந்தையான அன்ரூ (43 வயது) தனது மகளின் முடிவு குறித்து விப?க்கையில், ""எனது மகளின் தைரியமான முடிவையிட்டு நான் பெருமை அடைகின்றேன். எமது மகள் எங்களுடன் தனது எஞ்சிய வாழ்நாளை கழிக்க விருப்பம் கொண்டுள்ளார்'' என்று கூறினார்.

முன்னர் குருதிப் புற்றுநோய்க்கு ஆளாகியமை காரணமாக உபயோகித்த மருந்துகளா லேயே, ஹன்னாவின் இருதயம் பலவீனம டைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

0 comments: